உணவே மருந்து

Author: முகேஷ் .M // Category:

உணவே மருந்து-பழங்களின் மகத்துவம்">உணவே மருந்து-பழங்களின் மகத்துவம்

பழங்களில் 9095%தண்ணீர்[water content] இருக்கிறது.பழங்ககளை நாம் தினமும் சேர்த்துக் கொள்ளும் பொழுது,நம் உடம்பிலிருந்து சிறுநீர் நன்றாக பிரிந்து[have diuretic effect]நம் உடம்பிலுள்ள கழிவுகள் நீங்கிவிடும்[removes toxins & nitrogenous wastes from the body].

செர்ரி பழங்கள் மூட்டுகளில் ஏற்படும் வீக்கங்களுக்கும்,மூட்டு சம்பந்தமான நோய்களுக்கும் சிறந்த மருந்தாகும்.

நார்ச்சத்து நிறைந்த பழங்களை தினமும் சேர்த்துக் கொள்ளும் பொழுது,வயிறு சீக்கிரம் நிறைந்து விடுவதால் உடற் பருமனிலிருந்து தப்பிக்கலாம்.

பப்பாளியில் vit-A,C,D,Eமற்றும் anti oxidant அதிக அளவில் இருக்கிறது.இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட்,LDL என்ற கெட்ட கொலஸ்டிராலை தடுக்க உதவுகிறது.

திராட்சை,செர்ரி,கிவி,நாவல் பழம் போன்றவை இதயநோய், ஆபத்துகளிலிருந்து நம்மை காக்கிறது.

கொய்யா,ஆரஞ்சு,நெல்லி,பைனாப்பிள் மற்றும் பப்பாளியில்,ஆன்டி ஆக்சிடன்டும்,VIT-C ம் நிறைந்திருக்கிறது.

வாழைப் பழத்தில் vit-B,C,மாங்கனீஸ்,பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிகளவில் இருக்கிறது.உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

பொதுவாக பழங்களில் சோடியம்[sodium]குறைவாகவும்,பொட்டாஷியம் சத்து அதிகமாகவும் இருக்கும்.நாம் தினமும் நம் உணவில் பழங்களை சேர்த்துக் கொள்ளும் பட்சத்தில் நம் ரத்தாழுத்தம் சீராக இருப்பதுடன் நம் இதயமும் நன்றாக செய்யும்.

என்ன நன்பர்களே ! தினமும் உணவில் ஏதேனும் ஒரு பழத்தையோ,பழக்கலவையையோ சேர்த்துக் கொள்வீர்கள் தானே….. ஹிட்ஸ் : 1929

ஆதி மனிதர்கள் காய்கனிகளை உண்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.நாமோ உணவின் உன்னதத்தை உணராமல்,சமைத்தல் என்கின்ற பெயரில் சக்கையைத் தான் உண்கிறோம்.இட்லி ,தோசை,புட்டு,இடியாப்பம் என்ற நம் பாரம்பரிய உணவுகள் போய் பரோட்டா,பிஸ்சா,பர்கர்,நூடில்ஸ்,கோக்,பெப்ஸி என்று கண்டதையும் தின்று,குடித்து உடம்பு ஊதி[obesity],இளம் வயதிலேயே ரத்தகொதிப்பு[BP],சர்க்கரை [DIABETIC]போன்ற பல நோய்களுக்கு பலியாகிறோம்.

நான் என்னுடைய முந்தைய பதிவுகளிள் பழங்கள்,பச்சை காய்கறி,கீரை,முளைக்கட்டிய தானியங்கள்,பயறு வகைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி கூறியிருக்கிறேன்.அந்தந்த பகுதிகளில்,அந்தந்த காலங்களில் பயிராகும் தானியம்,பழம்,கீரை,காய்கறிகளை உண்டு பயன் பெற வேண்டும்[make use of seasonal vegetables,fruits,etc.,].இப்பொழுது இந்த சீசனில் கிடைக்கும் வேர்க்[ground nut],காரட்டிலிருந்து[carrot] செய்முறை குறிப்பு தருகிறேன்.நீங்களும் அவற்றை பின் பற்றி பயனடையலாம்.

செய்முறை:கடலையை தோலுரித்து,24 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.பின்பு ஒரு துணியில் இறுகக் கட்டி 24 மணி நேரம் தொங்கவிடவும்.

24 மணி நேரத்தில் முளை வந்துவிடும்.[பிஞ்சுக் கடலை முளைக்காது.நன்கு முற்றிய கடலையை பயன்படுத்தவும்].

பின்னர் முளைக்கட்டிய கடலையுடன்,வெல்லம்,சிறிது தேங்காய்த் துருவல்,ஏலக்காய் பொடி சேர்த்து உண்டு பாருங்கள்….மிக அருமையாக இருக்கும்.சுவையும் ,சத்தும் மிகுதியாக இருக்கும்.தீமை குறைவு.

கடலை மட்டுமன்றி அனைத்து வகை தானியங்கள்,பயறு வகைகளை முளைக்கட்டி உண்பது நம் ஆரோக்கியத்திற்கு உகந்தது.முளை விட்டதுமே தானிய நிலையிலிருந்து தாவர நிலையை அடைந்து நமக்கு கூடுதல் நன்மை பயக்கிறது.

வாரத்தில் ஒரு முறையேனும் இவ்வகை உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.காரட்டிலிருந்து இயற் உணவு செய்முறை குறிப்பை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

உணவே மருந்து-சிறுகுறிஞ்சாக்கீரை">உணவே மருந்து-சிறுகுறிஞ்சாக்கீரை

கொடி வகையைச் சேர்ந்த குறிஞ்சாக்கீரையை சர்க்கரைக் கொல்லி என்றும் அழைப்பர்.பல நூற்றாண்டுகளாக நம் தமிழ் நாட்டில் ,சிறுகுறிஞ்சானை சர்க்கரை நோய்க்கு அருமருந்தாக பயன்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக இப்பொழுது சர்க்கரை நோயாளிகளிடம் இக்கீரை பிரபலமாகிக் கொண்டு வருகிறது.

மருத்துவ பயன்கள்:

இக்கீரையை தொடர்ந்து உட் கொள்ளும் பொழுது ,நம் உடம்பில் உற்பத்தியாகும் beta-cell-களின் எண்ணிக்கையை அதிகரித்து,ரத்தத்தில் இன்சுலின்[insulin]அளவைக் கூட்டி,சர்க்கரையின் அளவை குறைக்கிறது.

இது தவிர கொலஸ்டிரால் மற்றும் டிரைகிலிசரைடின் அளவையும் குறைக்கிறது.இக்கீரையின் மருத்துவ குணத்திற்கு இதில் உள்ள ஜிம்னிக் அமிலமே காரணமாகும்.

குறிஞ்சாக்கீரையை பருப்புடன் சேர்த்து மசித்தும் சூப் வைத்தும் நம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

உணவே மருந்து-வாழை">உணவே மருந்து-வாழை

முக்கனிகளில் ஒன்றான எக்காலத்திலும் எளிதாக கிடைக்கும்.வாழைக்காய்,கனி,பூ,தண்டு இவை அனைத்தும் உணவாகவும்,மருத்துவ ரீதியாகவும் பயன் படுகிறது.மேலும் மரத்தின் எல்லா பாகங்களும் எந்த காலத்திலும் நமக்கு மிகுந்த பலனை தருகின்ற காரணத்தால் கற்பக விருட்சமாகத் திகழ்கிறது.

வாழையின் மருத்துவ குணங்கள்:

*வாழையிலையில் சுடச்சுட உணவைப் பரிமாறி உண்ணும் பொழுது ,அதிலுள்ள பச்சையம்[chlorophyll]உணவுடன் சேர்ந்து ரத்தத்தில் கலந்து தோல் நோய்களைக் குணப்படுத்தும்.

*வாழைத்தண்டின் சாறை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறுநீரகக்கல்[renal calculi],சிறு நீர்பாதையின் கிருமித் தொற்று மறையும்.

*100 கிராம் வாழைப் பழத்தில் 0.41.75கிராம் நார்ச்சத்து உள்ளது.உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணியான கொலஸ்டிராலை குடற்பகுதியில் தேக்கவிடாமல் தடுக்கிறது.எனவே உயர் உண்டாவது தடுக்கப்படுகிறது.

*மேலும் மலச்சிக்கல்,வாய்ப்புண்,தோல் நோய்கள்,தூக்கமின்மை போன்றவற்றுக்கு அருமருந்தாக பயன்படுகிறது.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த,”சொர்க்கத்தின் கனி” ‘FRUIT OF PARADISE’ என்று அழைக்கப்படும் வாழைப்பழத்தை நம் உணவில் தினமும் சேர்த்து கொள்வோம் ,பயன் பெறுவோம்.

நன்றி:வளரும் வேளாண்மை.

தொகுப்பு:diet-b

Tags : Tamil and tips on health foods in tamil.

, health tips, , டிப்ஸ், வாழை, , , benefits of ,

உணவே மருந்து_ப்ரூன்ஸ்[PRUNES]">உணவே மருந்து_ப்ரூன்ஸ்[PRUNES]

ப்ரூன்ஸ்னா என்ன?

ப்ளம்ஸ் !உங்க எல்லோருக்கும் தெரியும்.ப்ரூன்ஸ் ரொம்ப பேர் கேள்விபட்டிருக்க மாட்டீங்க.காயவைத்து பதப்படுத்தப்பட்ட யுரோப்பியன் ப்ளம்ஸ் தான் ப்ரூன்ஸ்.[ are dried version of plums.]நம்ம ஊர்ல எல்லா கடைகளிலும் கிடைக்கிறது.

ப்ரூன்ஸின் மருத்துவ குணங்கள்:

*ஒரு சில பழங்களைத்தான் super fruit என்று கூறுவர்.அந்த வரிசையில் ப்ரூன்ஸும் வருகிறது.ஏனெனில் இதில் இருக்கும் மருத்துவ குணங்களும்,antioxidants மற்றும் phytochemicals னால் தான்.

*இதில் அதிகளவில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால்,சிறந்த மலமிளக்கியாக செயல் படுகிறது.[prevents constipation].

*தொடர்ந்து நம் உணவில் இப் பழத்தை சேர்த்துக் கொள்ளும் பொழுது,எலும்பின் அடர்த்தி [bone density]குறையாமல் வலுவாக இருக்கும்.இதில் இருக்கும் பொட்டாஷியமும்,போரானும் தான் எலும்பிற்கு பலம் சேர்க்கிறது.

*ரத்த சோகைக்கு [anemia]சிறந்த மருந்து.

*ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.

*இதில் இருக்கும் பீட்டாகரோட்டீன் புற்று நோயிலிருந்து காக்கிறது.

*ப்ரூன்ஸில் கொழுப்புச்சத்து சுத்தமாக இல்லை.அதிகளவில் விட்டமிங்களும்,மினரல்ஸும் இருக்கிறது.தொடர்ந்து சாப்பிட்டால் முகம் நல்ல பொலிவுடன் காணப்படும்.தோலும் பளபளப்பாக இருக்கும்.

*இப்பழத்தை NUTRITION POWER HOUSE என்றும் கூறுவர்.இவ்வளவு சத்துக்கள் நிறைந்த இப்பழத்தை கண்டிப்பா உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

A PRUNE A DAY KEEPS AILMENTS AWAY.

0 Responses to "உணவே மருந்து"

Post a Comment